கோத்தா கினபாலு, மார்ச் 30 – தாவாவ் ஆற்றில் முதலைகளால் தாக்கப்பட்டதாக அஞ்சப்படும் 52 வயது நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கம்போங் சுங்கை உதின்னில் நேற்று கலை மணி 9.06 அளவில் சுல்கிஃப்லி சுனன் என்ற நபரை முதலைகள் தாக்கியதாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் செம்பனை பழங்களை ஏற்றிய மூங்கில் படகு மூலமாக ஆற்றைக் கடந்தபோது முதலைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து தாவாவ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் போலீஸ் குழுவின் உதவியோடு காணமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நிலத்தில் 480 சதுர மீட்டர் சுற்றளவிலும் ,ஆற்றில் 200 சதுர மீட்டர் சுற்றளவு பகுதியிலும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் காணாமல்போன சுல்கிஃப்லி சுனனை இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
தேடும் நடவடிக்கை இன்று காலையில் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது