
வாழ்க்கையில் எதுவுமே இல்லாமல் இருந்து, கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து, இன்று இறைவன் அருளால் சினிமாத்துறையில் சக்திக்கு மீறி சம்பாதித்து விட்டேன் கூறியுள்ளார் நடிகர் சூரி.
இதுவே போதும், இனி பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கவிருப்பதாக அண்மையில் நடைப்பெற்ற மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First look) வெளியீட்டு விழாவில் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதே வேளையில் இவ்வளர்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறனின் பங்கு அளப்பரியது என்று நெகிழ்ந்து பேசிய சூரி, மண்டாடி திரைப்படம், மறைந்து போன தமிழரின் பாரம்பரிய விளையாட்டை வெளிக்கொணரும் வண்ணம் அமைந்திருப்பதாகவும், இதில் நடிப்பதில் அவர் பெருமைக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்