![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-12-06-PM-895.jpg)
மொகடிசு, டிச 1 – ஆப்பிரிக்க நாடுகளில் பெய்த கடுமையான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து ஆப்பிரிக்க வட்டார நாடுகளில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சோமாலியா, கென்யா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளில் வெள்ள பேரிடரால் 300 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பருவ நிலை மாற்றத்தினால் ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 40 ஆண்டுகாலமாக கடுமையான வறட்சியினால் லட்சக்கணக்காக மக்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க வட்டாரத்தில் எல் நினொ (EL Nino) பருவநிலை மாற்றம் பெரிய அளவில் மழை காலத்தை ஏற்படுத்தியிருக்கிறது.