Latestமலேசியா

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 2027-ல் அறிமுகமாகிறது AI அடிப்படைக் கல்வி

கோலாலம்பூர், மார்ச்-26, நாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் வரும் 2027-ஆம் ஆண்டு தொடங்கி AI தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் என்ற புதியப் பாடத்தின் கீழ் அந்த AI அடிப்படை அம்சங்கள் மாணவர்களிடத்தில் சேர்க்கப்படும் என கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.

மாணவர்களுக்கான AI-யின் அடுத்தக் கட்ட போதனை இடைநிலைப்பள்ளியில் அதே பாடம் வாயிலாகவும், அறிவியல் கணினி-தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு -புத்தாக்கத் தொழில்நுட்ப பாடத்திலும் தொடரும் என்றார் அவர்.

பள்ளி மாணவர்கள் பாண்டித்துவம் பெற வேண்டிய 7 முதன்மை அம்சங்களில் டிஜிட்டல் அறிவும் ஒன்றெனக் கூறிய அமைச்சர், அதன் கீழ் இந்த AI தொழில்நுட்பம் மாணவர்களுக்கு போதிக்கப்படும் என்றார்.

டிஜிட்டல் அறிவைப் பெற்ற மாணவர்களால், அவ்வறிவையும், திறனையும் கொண்டு பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அதோடு, கணினி சார் அறிவின் மூலம் புதியவற்றைப் படைக்கவும் முடியும் என ஃபாட்லினா நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!