![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-11-May-2024-01-56-PM-5957.jpg)
ஏமாற்றுக் காரர்களின் பல மோசடிகளுக்கு மத்தியில், தற்போது புதிதாக வந்திருப்பது இணையத்தில் பூனை முக மரங்களின் பூ விதை விற்பனையாகும்.
Cats Eye Dazzle போன்ற பெயர்களில் இந்த தாவர விதைகள் அழைக்கப்படுகின்றன.
பார்க்க அழகான பூனைகளைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த பூக்களின் படங்களால் ஈர்க்கப்பட்டு பலர் அதனை தங்களின் வீடுகளில் வளர்க்கும் ஆசையோடு இணையத்தில் அவ்விதைகளை வாங்க முற்படுகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பூவே கிடையாது. அவை AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வியூகத்தை தந்திரமாக பயன்படுத்தி மோசடிக்காரர்கள் வெளியிட்ட படங்களாகும்.
இப்போது பல்வேறு இணையதளங்களிலும், eBay அல்லது Etsy போன்ற பிரபலமான மின் வர்த்தக தளங்களிலும் ஒரு பேக்கேட் விதைகள் 71 ரிங்கிட் முதல் 142 ரிங்கிட் வரையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறிப்பாக வெளிநாடுகளில் அதிகமானோர் இப்பூக்களின் விதைகளை வாங்க முயன்று ஏமாந்துள்ளதாகவும், இந்த மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் எனவும் போலிஸ் எச்சரித்து வருகிறது.