Latestஇந்தியா

இந்தியாவில் உடற்பயிற்சி மையத்திற்குள் புகுந்த திருடனை treadmill-லில் ஓட விட்ட உரிமையாளர்

மத்திய பிரதேசம், ஜூன்-10, இந்தியா, மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த வினோத சம்பவத்தில், திருடுவதற்காக உடற்பயிற்சி மையத்தினுள் நுழைந்துச் சிக்கிக் கொண்ட ஆடவனுக்கு, treadmill-லில் ஓட உரிமையாளர் தண்டனை விதித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இருட்டில் எப்படியோ அம்மையத்தினுள் அத்துமீறிய திருடன், திருடுவதற்கு விலையுயர்ந்தப் பொருட்களைத் தடவி தேடுவது CCTV-யில் தெரிகிறது.

உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது கைப்பேசியில் எச்சரிக்கை ஒலி அலறியதை அடுத்து, அந்த நள்ளிரவில் அவர் அங்கு விரைந்தார்.

திருடனைக் கையும் களவுமாகப் பிடித்தவர், ஒரு பாடமாக இருக்க வேண்டி அவனை treadmill-லில் ஓட வைத்து ‘தண்டனை’ வழங்கினார்.

பின்னர் போலீசுக்குத் தகவல் கொடுத்து திருடனை அவர்களிடத்தில் ஒப்படைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!