![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-04-Apr-2024-09-38-AM-6021.jpg)
சுபாங்,ஏப் 4 – இந்தோனேசிய தற்காப்பு அமைச்சரும் இவ்வாண்டு நடைபெற்ற இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவருமான Probowo Subianto ஒரு நாள் சிறப்பு வருகை மேற்கொண்டு நேற்று மலேசியா வந்தடைந்தார். Prabawo வையும் அவரது பேராளர் குழுவிரையும் ஏற்றிவந்த சிறப்பு விமானம் நேற்றிரவு மணி 10.15 அளவில் சுபாங்கிலுள்ள விமானப் படைத் தளம் வந்தடைந்தது. அவரை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ Mohamed khaled Nordin வரவேற்றார். இன்று புத்ரா ஜெயாவிலுள்ள Perdana Putra வில் பிரமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை Probowo சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும் கோலாலம்பூரில் தற்காப்பு அமைச்சில் தற்காப்பு அமைச்சரையும் Prabowo சந்திப்பார்.