Latestமலேசியா

இன்று முதல் டீசல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென்

புத்ராஜெயா, ஜூன்-10, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை இன்று முதல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மே மாத சந்தை சராசரி விலையின் அடிப்படையில், மானியம் இல்லாமல் அவ்விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட மானிய முறை அமுலுக்கு வந்திருப்பதால், தீபகற்பத்தில் டீசல் விலையை ஒருமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயார் என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் கூறினார்.

இனி வாரந்தோறும் நிதி அமைச்சு டீசல் விலையை அறிவிக்கும் என்றார் அவர்.

என்றாலும், நிலைத்தன்மையற்ற விலையைத் தவிர்க்க, அரசாங்கம் சந்தையை அணுக்கமாக கண்காணித்து வரும் என அமைச்சர் உறுதியளித்தார்.

இலக்கு வைக்கப்பட்ட மானிய முறை அமுலுக்கு வந்திருப்பதால், வருமான இழப்பு குறைந்துள்ளது.

இதன் வழி ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும் என அவர் மேலும் கூறினார்.

டீசல் விலை நிர்ணயத்தை அடுத்து விலைவாசி உயர்வு ஏற்படாதிருப்பதும் உறுதிச் செய்யப்படும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!