![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-12-Dec-2023-12-28-PM-3307.jpg)
கோலாலம்பூர், டிச 12 – இ.பி.எப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான அமீர் ஹம்சா அஜிசான் இன்று காலையில் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேலவை தலைவர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் முன்னிலையில் அவர் செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அமீர் இரண்டாவது நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என ஆருடங்கள் வெளியாகியிருந்தன.
இந்த ஆருடங்கள் உண்மையாகும் என்பதற்கு அறிகுறியாக அவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிதியமைச்சராக இருந்து வருகிறார். அவரது சுமையை குறைக்கும் வகையில் இரண்டாவது நிதியமைச்சர் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.