![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/85b7b3f7-fw1334297_ptj02_17102023_mof-lpr-780x470.webp)
கோலாலம்பூர், நவ 24 – காலியாக இருந்துவரும் உள்நாட்டு வாணிகம் மற்றும்
வாழ்க்கை செலவினத்துறைக்கான புதிய அமைச்சர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் Salahuddin Ayub கடந்த ஜூலை மாதம் காலமானதை தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்த பதவியை ஏற்பதற்கு உங்கள் மனதில் எவராவது இருக்கிறார்களா என வினவப்பட்டபோது ஆம் என்று அன்வார் பதில் அளித்தார். எனினும் உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சராக நியமிக்கப்படுபவர் குறித்த இதர விவரங்களை அன்வார் வெளியிடவில்லை.