![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-03-Mar-2024-09-32-AM-7529.jpg)
குவாலா கிராய், மார்ச் 3 – கிளந்தான், குவாலா கிராயில் தாய்லாந்து நாட்டவர் ஓட்டிய கார் திடீரென எதிர் திசையில் புகுந்து காருடன் மோதியதில், ஒரு வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
ஜாலான் கோத்தா பாரு – குவா மூசாங் சாலையின் 76.5-வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
அக்குடும்பம் Perodua Myvi-யில் கோத்தா பாருவில் இருந்து குவா மூசாங் சென்றுக் கொண்டிருந்தது; அப்போது, குவா மூசாங்கில் இருந்து கோத்தா பாரு சென்றுக் கொண்டிருந்த தாய்லாந்து நாட்டவரின் Nissan March கார், திடீரென Myvi பயணித்தப் பாதையில் புகுந்து அதுடன் நேருக்கு நேர் மோதியது.
அதில் காரோட்டியான கணவன், மனைவி மற்றும் ஒரு வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, 6 வயது பையன் மருத்துவமனையில் சிகிசைப் பெறும் போது மரணமடைந்தான்.
அவர்களின் மூத்தப் பையனான 9 வயது சிறுவன் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பி காயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.
விபத்துக்குக் காரணமான அந்த தாய்லாந்து காரோட்டிக்குக் கைகளிலும் நெஞ்சிலும் படுகாயம் ஏற்பட்டது; அவரின் காரில் இருந்தப் பயணி முகத்தில் காயமடைந்தார்.
அவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.