![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/000_8RK9W6.jpeg)
கோலாலம்பூர், ஜூன் 10 – இவ்வாண்டு ஏப்ரல் மாதம்வரை நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை சிறிது குறைந்து 565,000 ஆக எட்டியது. ஒட்டு மொத்தமாகவே உள்நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 3.3 விழுக்காடு குறைந்துள்ளதாக மலேசிய புள்ளி விவரத்துறையின் தலைமை அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் ( Mohd Uzir Mahidin ) தெரிவித்தார். அவர்களில் 79. 7 விழுக்காட்டினர் தீவிரமாக வேலை தேடுவோராக மற்றும் வேலை செய்வதற்கு தயாராய் இருப்பதாகவும் அவர் கூறினார். மூன்று மாதத்திற்கும் குறைவாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 61.7 விழுக்காடாக உள்ளது.
அதே வேளையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 6.7 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதாக Mohd Uzir Mahidin சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை வேலையில்லாமல் இருக்கும் 15 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 10.6 விழுக்காடாக அதாவது 305,000த்திற்கும் அதிகமானவர்கள் என கூறினார். தொழிலாளர் சந்தை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிலைத்தன்மையோடு இருந்ததோடு மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாகவும் அது இருந்தது.