Latestமலேசியா

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ; வேந்தராக டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் நியமனம்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா இன்று கெடா செமிலிங்கில் உள்ள அதன் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

இன்றைய பட்டமளிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 692 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

பட்டமளிப்பு என்பது மாணவர்கள் பருவத்தின் மிக முக்கியமான அங்கம் என்பதால், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள மாணவர்களின் பெற்றோர்கள், குடும்ப உறவினர்கள் என பலரும் இன்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

தங்களின் வாழ்க்கையில் 3லிருந்து 5 ஆண்டுகள் வரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள படிப்பில் கவனம் செலுத்திய மாணவர்களை கெளரவிக்கும் தினமாக இந்த பட்டமளிப்பு விழா அமைந்திருந்தது.

இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்பு அம்சமாக, ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.

தனதுரையில், ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்து 25மில்லியன் ரிங்கிட் வருடாந்திர மானியம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிற்கு டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அத்தொகை ஏம்ஸ்ட்-டின் அடிப்படை மற்றும் போதனா வசதிகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

அனைத்துலக அளவில் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று வரும்
ஏம்ஸ்ட் தொடர்ந்து தனது கல்வி தரத்தை மேம்படுத்தி வரும் 2030–ஆம் ஆண்டுக்கள் உலக பல்கலைக்கழக தர வரிசையில் 500 இடங்களுக்குள்ளும், ஆசியாவில் முதல் 100 இடங்களுக்கும் வர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் தமது வேந்தர் நியமன ஏற்புரைரையில் தெரிவித்தார்.

பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு அவர்கள் தங்களின் கல்விக்காக அயராத அர்ப்பணிப்பு செய்துவரும் பெற்றோர்களை என்றென்றும் மறக்காமல் தங்களின் எதிர்கால வளர்ச்சியில் பெற்றோர்களையும் ஓர் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

பேராசிரியர் டாக்டர் சேதுராமன் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் emeritus professor அங்கீகாரம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முனைவர், முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு, தங்கப் பதக்கம் பெற்ற அனைத்து நிலை மாணவர்களுக்கும் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில், ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணன், துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜோன் அந்தோனி சேவியர், MIEDயின் வாரிய உறுப்பினர்கள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வாரிய இயக்குனர்கள், பேராசிரியர்கள், பிரமுகர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நாட்டில் இந்தியர்கள் கல்வி வழி மேம்பாடு காண வேண்டும் எனும் இலக்கோடு தொடங்கப்பட்ட ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெறோர்களின் கனவை நிறைவேற்றுவதில் வெற்றிக் கண்டுவருகிறது என்பதை இன்றைய 14-வது பட்டமளிப்பு விழா பறைசாற்றியுள்ளதாக வந்திருந்த பிரமுகர்கள பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!