![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-18-Apr-2024-01-12-PM-8928.jpg)
தெஹ்ரான், ஏப் 18 – ஓமன் வளைகுடாவில் மூழ்கிய இலங்கை எண்ணெய் கொள்கலன் கப்பலிலிருந்து 21 பணியாளர்களை ஈரானிய மீட்புப்படையினர் காப்பாற்றியுள்ளனர். குக் தீவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பல், ஈரானின் Hormozgan மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் உள்ள
Jask County யிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த கொள்கலன் கப்பலின் பெயர் வெளியிடப்படவில்லை.
மாநில கடல் கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு கிடைத்த எச்சரிக்கையை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக Jask கடல்சார் அமைப்பின் தலைவர் Mohammad Amin தெரிவித்தார். மீட்பு நடவடிக்கைக்குப் பின் ஐந்து ஊழியர்களுக்கு மருத்துவ கண்காணிப்பு தேவைப்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.