![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-12-57-PM-9944.jpg)
சிரம்பான், பிப் 13 – கம்போங் பாரு நீலாயில் நேற்று மாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு வீடுகள், இரண்டு கார்கள், ஒரு டிரக்டர் மற்றும் ஒரு கோயிலும் மிகவும் மோசமாக சேதம் அடைந்தன. எனினும் அந்த தீவிபத்தில் எவரும் காயம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. முதல் வீடு 80 விழுக்காடு சேதம் அடைந்ததாக நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை தலைவர் பக்காரியா முகமட் சாலே தெரிவித்தார். இரண்டாவது வீட்டின் சமையல் அறைப் பகுதி மிகவும் மோசமாக சேதமடைந்தது.
மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த சிறு கோயிலும் 80 விழுக்காடு சேதம் அடைந்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த 14 தீயணப்பு வீரர்கள் 35 நிமிடங்களுக்குப் பின் தீயை கட்டுப்படுத்தினர். அங்கிருந்த இரண்டு கார்கள் முழுமையாக அழிந்தவிட்டதோடு ஒரு டிரக்டர் 80 விழுக்காடு சேதம் அடைந்தததாக பக்காரியா வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார். இத்தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.