![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-19-Mar-2024-07-10-PM-3442.jpg)
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 – சிலாங்கூர், காஜாங், சுங்கை லோங்கிலுள்ள, பள்ளி ஒன்றின் முன்புறம் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு முன்புறம் நிகழ்ந்த கைகலப்பு சம்பவம் தொடர்பில், கடந்த வியாழக்கிழமை, போலீஸ் புகார் ஒன்றை பெற்றதை, காஜாங் போலீஸ் தலைவர் ACP முஹமட் சாயிட் ஹசான் உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின் போது, இரு பள்ளி மாணவர்கள், ஆடவர் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர்களை அடித்து காயப்படுத்திய அக்கும்பல், பின்னர் இரு வேறு வாகனங்களில் தப்பிச் சென்றது.
தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் பின்னர் காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அந்த தாக்குதல் தொடர்பில் கைதுச் செய்யப்பட்ட 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்கள், இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த கைகலப்பு சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.