Latestமலேசியா

காபாரில், வியாபாரி கொலை ; குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் தகவல்

ஷா ஆலாம், மே 15 – சிலாங்கூர், காபாரில், கடந்த மாதம் “மாபியா” பாணியில் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், குண்டர் கும்பல் நடவடிக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் நம்புகிறது.

அந்த கொலை தொடர்பில் இருவரை இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை ; அதில் ஒருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் தெரிவித்தார்.

அதே சமயம், அந்த கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, மேலும் இருவர் தேடப்பட்டு வருவதையும் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.

அவ்விருவரும் இன்னும் உள்நாட்டில் தான் உள்ளனரா அல்லது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டனரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

முன்னதாக, முன் விரோதம் காரணமாக, காப்பார், தாமான் ஜெயாவிலுள்ள, வீடொன்றில், பாராங் கத்திகளுடன் புகுந்த நான்கு ஆடவர்கள், 38 வயது வியாபாரி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!