Latestமலேசியா

காப்பாரில் வீட்டில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு; CCTV பதிவைப் பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி

கிள்ளான், ஏப்ரல் 26 – கிள்ளான் காப்பாரில், கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் சடலம் குப்புறப்படுத்தப்படி வீட்டொன்றில் கண்டெடுக்கப்பட்டது.

வியாழக்கிழமைக் காலை 11.40 மணி வாக்கில் Taman Jaya குடியிருப்பாளர்கள் அச்சடலத்தைக் கண்டு தகவல் கொடுத்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் Asisten Komisioner S Vijaya Rao தெரிவித்தார்.

வந்து பார்த்த போது, வீட்டின் படுக்கையறைக்கு முன் புறம் 38 வயது அந்நபரின் சடலத்தை போலீஸ் கண்டது.

CCTV கேமரா பதிவைப் பரிசோதித்ததில், 4 ஆடவர்கள் பாராங் கத்தி மற்றும் taser gun எனப்படும் மின் அதிர்வு துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைவது கண்டு போலீஸ் அதிர்ச்சியடைந்தது.

இன்னொரு சந்தேக நபர் வீட்டுக்கு வெளியே காரில் அமர்ந்திருப்பதும் அதில் பதிவாகியுள்ளது.

கொலைக்கானக் காரணம் உள்ளிட்டவற்றைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக Vijaya Rao சொன்னார்.

குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் பதிவுச் செய்யப்பட்டு, சந்தேக நபர்களுக்கு எதிராகத் தேடுதல் வேட்டைத் தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!