Latestமலேசியா

கோல குபு பாரு தேர்தலை புறக்கணிக்கவில்லை – டத்தோ ரமணன்

கோல குபு பாரு, ஏப்ரல் 25 – இந்திய சமுகத்திற்காக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும், எதிர்கட்சியினர் சிலர் பொய்களை உரைத்து மக்களைக் குழப்பி வருகின்றனர் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் சாடியுள்ளார்.

இன்று கோல குபு பாருவில் நடைபெற்ற இந்திய மக்களுடனான சந்திப்பின் வழி எதிர்கட்சிகள் பொய் தான் கூறுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே இனி பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதனிடையே இன்றைய நிகழ்ச்சியில் இந்திய மக்கள் பயனடையும் நோக்கில் பெண் திட்டத்திற்கான முகப்பிடம், மித்ரா, அமானா இக்தியார், தெக்குன், சொக்சோ ஆகிய முகப்பிடங்களும் அமைய பெற்றுள்ளதைக் குறித்தும் அவர் தெரிவித்தார்.

கோல குபு பாருவில் நடைபெற்ற இந்திய மக்களுடனான இன்றைய சந்திப்பில், மித்ராவின் தலைவர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!