![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-03-Dec-2023-12-11-PM-9885.jpg)
கோத்தா பாரு, டிச 3 – கிளந்தானில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைகிறது என்பதற்கு அறிகுறியாக அம்மாநிலத்தில் வெள்ள நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை மணி 8.15 வரை பாதிக்கப்பட்ட 802 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாசிர் மாஸ், பச்சோக், தானா மேரா மற்றும் கோத்தா பாரு ஆகிய இடங்களில் உள்ள 14 நிவாரண மையங்களில் தங்கியிருக்கின்றனர். கிளந்தானில் வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வட்டாரமாக பாசிர் மாஸ் திகழ்கிறது. அந்த வட்டாரத்தில் மட்டும் வெள்ள பேரிடரால் 2,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ரந்தாவ் பஞ்சாங்கில் சுங்கை கோலோக் ஆற்றில் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி 10.33 மீட்டராக உயர்ந்துள்ளது.