Latestமலேசியா

கிள்ளானில் பள்ளியொன்றின் முன்புறம் 4 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் பதின்ம வயது பையன்கள் இருவர் மரணம்

கிள்ளான், ஏப்ரல் 2 – சிலாங்கூர் கிள்ளானில் பள்ளியொன்றின் முன்புறம் 4 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில், பதின்ம வயதுப் பையன்கள் இருவர் உயிரிழந்தனர்.

அச்சம்பவம் நேற்று முந்தினம் இரவு புக்கிட் காப்பார் தேசிய இடைநிலைப் பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது.

உயிரிழந்த 15 வயது பையன்கள் இருவரும், சம்பவத்தின் போது காப்பாரில் இருந்து புக்கிட் காப்பாருக்குச் சென்றுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ஓட்டிச் சென்ற Yamaha 135LC மற்றும் Nouvo ரக மோட்டார் சைக்கிள்கள், எதிர்திசையில் இருந்து வந்த 2 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில், தலையில் படுகாயம் அடைந்து அங்கேயே மரணமுற்றதாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷ்னர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

சடலங்கள், சவப்பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள வேளை, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் விசாராணைக்காகத் தேடப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!