![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-08-Feb-2024-07-37-PM-2562.jpg)
குளுவாங், பிப்ரவரி 8 – ஜோகூர், குளுவாங், ஜாலான் ஜோகூர் பாரு – ஆயிர் இத்தாம் சாலையில், MPV பல்நோக்கு வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு மணி 9.30 வாக்கில், அவ்விபத்து நிகழ்ந்தது.
அவ்விபத்தில், பாதசாரியான 70 வயது சோன் ஆவ் கெள என்பவர் உயிரிழந்ததை, குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் பாஹ்ரின் முஹமட் நோ உறுதிப்படுத்தினார்.
ஜோகூர் பாருவிலிருந்து ஆயிர் இத்தாம் நோக்கி பயணமான தோயோத்தா எஸ்திமா ரக வாகனம், இருள் சூழ்ந்த நடு ரோட்டில் நடந்து சென்றதாக கூறப்படும் அம்முதியவரை மோதித் தள்ளியதாக நம்பப்படுகிறது.