![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-24-Nov-2023-11-36-AM-7429.jpg)
கோலாலம்பூர், நவ 24 – இந்தோனேசி பெண் ஒருவருடன் அவரது குழந்தையை வாங்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தாய், அவரது மகள் மற்றும் ஜாலான் அம்பாங்கிலுள்ள குழந்தைகள் பொருள் விற்பனை கடையிலிருந்து குழந்தையை கடத்திச் சென்றதில் அவர்கள் சம்பந்தப்பட்து தொடர்பான விசாரணையின் முடிவை சட்டத்துறை தலைவரில் அலுவலகத்தில் போலீசார் சமர்ப்பித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய தாய் மற்றும் மகளுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வருவதற்கான பரிந்துரையை சட்டத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் சமர்ப்பித்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்திருக்கிறார். அந்த இருவரும் நேற்று போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அதே வேளையில் குழந்தையின் தாய் 1952ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டத்தின் கீழ் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.