Latestமலேசியா

குவாலா கங்சாரில், 11 வயது சிறுமி கற்பழிப்பு; ஐந்து சகோதரர்கள் உட்பட அறுவருக்கு எதிராக குற்றச்சாட்டு

குவாலா கங்சார்,டிசம்பர் 4 – பேராக்கில், 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஐந்து சகோதரர்கள் உட்பட அறுவருக்கு எதிராக இன்று குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், அந்த கொடூர செயலை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 23 வயது அமிருல் அனுவார் ஜுல்கிப்லி உட்பட அவரது 14 மற்றும் 17 வயது சகோதர்களும், 16 வயது நண்பன் ஒருவனும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த மாதம், கெரிக், கம்போங் பஹாட் லூவார் கிராமத்திலுள்ள, வீடொன்றின் அறையில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகளுக்கு குறையாத 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இதர இருவர், அதே சிறுமியின் மார்பகத்தை தொட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

23 வயது அமிருல் அனுவார் ஜுல்கிப்லி, ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; பாதிக்கப்பட்ட சிறுமியை நெருங்க கூடாது, வழக்கு முடிவடையும் வரையில் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டுமென கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இதனிடையே, வயது குறைந்த இதர ஐவர், அதே கூடுதல் நிபந்தனைகளுடன், நான்காயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணை, ஜனவரி 22-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, நவம்பர் 21-ஆம் தேதி, 11 வயது சிறுமியை மாறி மாறி கற்பழித்ததாக நம்பப்படும், ஆறு உடன்பிறப்புகள் உட்பட எழுவர் கைதுச் செய்யப்பட்டனர்.

நவம்பர் மூன்றாம் தேதி, சம்பந்தப்பட்ட சிறுமியின் ஒன்பது வயது சகோதரன் வீட்டில் இருந்த போதும், அறையில் சிறுமி மாறி மாறி கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!