Latestமலேசியா

மரணத்தில் முடிந்த கார்ப் பந்தயம்; மலாக்கா பந்தயத் தளத்தில் பள்ளி ஆசிரியர் பலி

மலாக்கா, ஏப்ரல்-29, மலாக்கா டுரியான் துங்காலில் உள்ள அனைத்துலக மோட்டார் பந்தயத் தளத்தில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் தலையில் படுகாயமடைந்த 48 வயது அந்நபர், உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சைப் பலனளிக்காது இரவு 10 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

மோட்டார் பந்தய கிளப்பொன்று அக்கார்ப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, மலாக்கா போலீஸ் தலைவர் ட்சுல்காய்ரி முக்தார் கூறினார்.

அந்த ஆசிரியர் ஓட்டிய Honda Civic கார், குறுகலான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அவ்விபத்துக்கு பந்தயத்தள நிர்வாகம், போட்டி ஏற்பாட்டாளர் அல்லது மரணமடைந்தவரின் கவனக்குறைவுக் காரணமா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!