கோலாலம்பூர், ஏப் 4 – Allah பதத்தைக் கொண்ட காலுறை விவகாரம் தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim அழைப்பு விடுத்தபோதிலும் கேகே மார்ட் விற்பனை மையத்திற்கு எதிரான புறக்கணிப்பை தொடரப்போவதாக அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் Muhamad Akmal தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்
KK Mart விற்பனை நிலையத்தின் நிர்வாக தலைவர் Chai Kee Kan னுக்கு நேற்று பேட்டி வழங்கிய பேரரசர் Sultan Ibrahim காலுறைகள் தொடர்பான சர்ச்சை தொடர்வதை தாம் விரும்பவில்லை என்று கூறியிருந்தார். அப்படியிருந்தும் KK Mart விற்பனை நிலையங்களுக்கு எதிரான புறக்கணிப்பை நிறுத்த வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை அம்னோ இளைஞர் பிரிவு தலைவைர் ஏற்கவில்லை. புறக்கணிப்பை பேரரசர் நிறுத்தச் சொன்னாரா? என Akmal கேள்வி கேட்டதாக உள்ளூர் இணையத்தள பதிவேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.