
கோலாலம்பூர், மே 5- கோலாலம்பூர் மாநகரில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட 10 பொழுதுபோக்கு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட Ops Noda பரிசோதனையில் 22 முதல் 48 வயதுடைய 38 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்நாட்டைச் சேர்ந்த எழுவருடன் வங்காளதேசம், உகண்டா, வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியா, கென்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா ( Rusdi Mohd Isa ) தெரிவித்தார்.
மேலும் அந்த பொழுதுபோக்கு நிலையங்களில் உள்ள சாதனங்கள், சிசிடிவி கேமராக்கள் , 2,892 ரிங்கிட் ரொக்கம், ஆகியவவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பொழுதுபோக்கு நிலையங்கள் அனுமதியின்றி வெளிநாட்டு தொழிலாளர்களையும் வேலைக்கு வைத்திருந்ததாக அவர் கூறினார்.