![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-20-at-8.50.30-AM.jpeg)
கோலாலம்பூர், டிச 20- நாட்டில் கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அதிகமானோர் முகக்கவசத்தை அணிந்து வருகின்றனர். பொதுமக்களில் பலர் முகக் கவசம் அணிவதை அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவிப்பதில் கட்டாயப்படுத்த வேண்டும் என பலர் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தினால் தொற்று பரவலை மேலும் ஆக்கப்பூர்வமாக தடுக்க முடியும் என பலர் கருதுகின்றனர்.
நமது மக்களில் பலர் பிடிவாதமானவர்கள். கட்டாயப்படுத்தாதவரை முகக்கவசத்தை அணியமாட்டார்கள் என தனியார் நிறுவனத்தின் ஊழியராக 48 வயதுடைய அர்மின் அசாம் தெரிவித்தார்.
கோவிட் தொற்று இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பு மட்டுமின்றி மற்றவர்களின் பாதுகாப்பு விவகாரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.