![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-15-May-2024-07-59-PM-3751.jpg)
பினாங்கு , மே 15 – சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட ஏழு நபர்கள் மீது ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் நெடுஞ்சாலையில் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக Muhammad Shazwan Hafiz Mohd Abdul Sani , Muhammad Sharman Mohd Salim ஆகியோர் மீது மாஜிஸதிரேட் Nadratun Naim Mohd Saidi முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த Muhamad Shazwanனுக்கு 5,000 ரிங்கிட், மற்றும் Muhamad Sharman னுக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஐவரில் மூவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதமும் இதர இருவருக்கு 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. Shamin Izlin என்பவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் மற்றும் இரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வேளையில் Muhamad Hilmi என்பவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது நிகழ்ந்த விபத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மூவர் உயிர் இழந்ததோடு மேலும் இருவர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணம் அடைந்தனர்.