Latestமலேசியா

சாகும்வரை தூக்கில் போடுங்கள் நீதிபதியிடம் கெஞ்சிய குற்றவாளி

மலாக்கா , ஏப் 27 – போதைப் பொருள் வைத்திருந்ததில் குற்றவாளி என சந்தேகமின்றி நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து தண்டனை விதிப்பதற்கு முன் கடைசியாக என்ன கூறுவிரும்புகிறீர்கள் நீதிபதி வினவியபோது சாகும்வரை தூக்கில் போடுங்கள் என குற்றவாளி கெஞ்சினான். மலாக்கா , Ayer Kero நீதிமன்றத்தில் 2. 7 கிலோ மெத்தம் பெத்தமின் போதைப் பொருள் வைத்திருந்ததில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து 39 வயதுடைய Ng Chan Keong இந்த கோரிக்கையை விடுத்தான்.

எனினும் தண்டனையை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் எனக்கூறி ஐந்து நிமிடத்திற்கு பின் தீர்ப்பு வழங்குவதாகக்கூயி நிதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். நீதிமன்றம் மீண்டும் கூடியபோது Ng chan keong கிற்று கைது செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து ஆயுள் கால தண்டனையும் 12 பிரம்படியும் விதிப்பதாக நீதிபதி Anseim Charles தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!