Latestஉலகம்சிங்கப்பூர்

சிங்கப்பூரில், மிளகாய் சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்ட 4 வயது சிறுவன் மரணம் ; தந்தைக்கு 8 மாதச் சிறை

சிங்கப்பூர், மே 31 – தனது நான்கு வயது மகனை மிளகாய் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தி, அவனுக்கு மரணம் விளைவித்த ஆடவர் ஒருவருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

38 வயதான அவ்வாடவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.

மலம் கழித்து தன்னை அசுத்தப்படுத்திக் கொண்ட மகனுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட ஆடவர் மிளகாய் உண்ணுமாறு தனது மகனை பணித்துள்ளார்.

அவன் அதனை உண்ண மறுத்ததால், அவனை படுக்க வைத்து வாயில் மிளகாயை திணித்துள்ளார்.

எனினும், அதனை தாங்க முடியாமல் அச்சிறுவன் வாந்தி எடுத்ததோடு, உடனடியாக மயக்கமுற்றதாக கூறப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு மாதம் இரண்டாம் தேதி, செங்காங் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, வீடொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவனுக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டன. எனினும், தொட்டையில் சிக்கிய பொருளால் மூச்சுத் திணறலுக்கு இலக்காகி அச்சிறுவன் உயிரிழந்தது, சவப்பரிசோதனை வாயிலாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!