Latestமலேசியா

சிரம்பான் சுற்று வட்டாரத்தில் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை; 55 கள்ளக்குடியேறிகள் சிக்கினர்

சிரம்பான், மே-15, சிரம்பானில் வெளிநாட்டவர்கள் அதிகம் கூடும் 27 இடங்களில் இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 55 கள்ளக்குடியேறிகள் பிடிபட்டுள்ளனர்.

மொத்தமாக 200 பேர் பரிசோதிக்கப்பட்டதில், பல்வேறுக் குற்றங்களுக்காக அந்த 55 பேரும் கைதாகினர்.

அவர்கள் இந்தோனீசியா, மியன்மார், வங்காளதேசம், பாகிஸ்தான், வியட்நாம்ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையின் இயக்குனர் Kennith Tan Ai Kiang தெரிவித்தார்.

கைதாவர்களில் வியட்நாமிய சிறுமி ஒருவரும் அடங்குவாள்.

குடிநுழைவுத் துறை சட்ட மீறல் தொடர்பில் மேல் நடவடிக்கைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!