Latestமலேசியா

சிறுவன் Zayn Rayyan படுகொலை; விசாரணைக்காக பெற்றோர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூன்-1 – கடந்தாண்டு டிசம்பரில் டாமான்சாரா டாமாயில் கொல்லப்பட்ட autisme குறைபாடு கொண்ட 6 வயது சிறுவன் Zaynn Rayyan Abdul Matiin-னின் பெற்றோர் விசாரணைக்காக அதிரடியாகக் கைதாகியுள்ளனர்.

சிலாங்கூர், Puncak Alam-மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வாக்கில் அவர்கள் கைதானதை, மாநில போலீஸ் தலைவர் Datuk Hussein Omar உறுதிப்படுத்தினார்.

எனினும் அது குறித்த மேல் தகவல்கள் எதுவும் இன்னும் தெரிய வரவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மதியம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட Zayn, மறுநாள் அவனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆற்றோரப் பகுதியில் கழுத்தில் காயங்களுடன் இறந்துக் கிடக்கக் காணப்பட்டான்.

அவனது உடலில் காயங்கள் இருப்பது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, திடீர் மரணத்தில் இருந்து படுகொலையாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டது.

Zayn கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் முயற்சிக்கு தகவல் அளித்து உதவும் நபருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என சிலாங்கூர் குற்றத் தடுப்பு அறவாரியம் MCPF முன்னதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!