![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-08-59-AM-4056.jpg)
பெட்டாலிங் ஜெயா, மே 29 – சிலாங்கூர் எப்சி மற்றும் ஹரிமாவ் மலாயா அணியின் ஆட்டக்காரர் பைசால் ஹலீம் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இரண்டு வாரங்களாக தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் இருக்கும் இடம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் எப்சி அணியின் தொழில்நுட்ப குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷஹரில் மொக்தார் தெரிவித்தார்.
அவர் முழுமையாக குணமடையவும், எந்த ஒரு இடையூறும் இன்றி அமைதியான முறையில் சிகிச்சை பெறவும் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பைசால் ஹலிம், கடந்த சனிக்கிழமை, எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் முன்கூட்டியே மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
மே ஐந்தாம் தேதி, அமில தாக்குதலுக்கு இலக்கான அவருக்கு நான்கு கட்டங்களாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து நேர்மறையான முன்னேற்றத்தை பதிவுச் செய்து வந்த அவர் முன்கூட்டியே மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
எனினும், காயங்களை சுத்தம் செய்ய அவர் அவ்வப்போது மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.