![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/01/MixCollage-30-Jan-2024-12-19-PM-9948.jpg)
ஷா அலாம், ஜன 30 – சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களில் உள்ள 20 உறுப்பினர்கள் பதவிகள் இன்னமும் தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலாதுறைக்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் சூயி லிம் தெரிவித்திருக்கிறார். பக்காத்தான் ஹரப்பான் நிர்வாகத்திலுள்ள சிலாங்கூர் அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 20 ஊராட்சி மன்ற இடங்களை சிலாங்கூர் அம்னோ நிராகரித்துவிட்ட போதிலும் அந்த இடங்கள் சிலாங்கூர் தேசிய முன்னணிக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக எங் சூயி லிம் கூறினார். காலியாக இருக்கும் இந்த 20 இடங்கள் உடனடியாக நிரப்பப்படாவிட்டாலும் பிறகு அதற்கான உறுப்பினர்களை சிலாங்கூர் தேசிய முன்னணி நியமிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் 20 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வேண்டும் என சிலாங்கூர் அம்னோ இதற்கு முன் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் அந்த 20 இடங்களை மாநில அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிட்டதாக இதற்கு முன் சிலாங்கூர் அம்னோ அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு செயற்குழுவுக்கான 373 இடங்களை சிலாங்கூர் அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என சிலாங்கூர் அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது.