![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-03-Apr-2024-07-33-PM-5427.jpg)
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 3 – செலாங்கா செயலி மூலம் திரட்டப்பட்ட சிலாங்கூர் மக்களின் தரவுகளை, பாடு – மத்திய தரவுத் தள மையத்துடன், மாநில அரசாங்கம் பகிர்ந்து கொள்ளும்.
சிலாங்கூர் மக்களின் விவரங்களை சரிபார்க்கவும், புதுப்பிக்கவும் அது உதவுமென, மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்தின், உதவித் திட்டங்களை பெரும் நபர்களின் விவரங்களும் அதில் அடங்கும்.
தேசிய கொள்கைகள் அல்லது உதவித் திட்டங்களை வரைய அந்த விவரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு உதவியாக இருக்குமென, அமிருடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் துணை நிறுவனமான Selangkah Ventures நிறுவனத்திற்கு சொந்தமான செலங்கா செயலியில், சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மானியங்கள் அல்லது உதவி பெறாதவர்கள் உட்பட சுமார் 38 லட்சத்து 70 ஆயிரம் பயனர்களின் தரவுகள் உள்ளன.
ஏப்ரல் 19-ஆம் தேதிக்குள், செலாங்காவிற்கும் பாடுவிற்கும் இடையில் தரவு பரிமாற்றம் மற்றும் தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமிருடின் கூறியுள்ளார்.