![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-24-Feb-2024-11-56-AM-2610.jpg)
சுங்கை பூலோ, பிப்ரவரி 24 – சிலாங்கூர் மாநில அளவிலான மடானி தெக்குன் விழா வரும் மார்ச் 1 முதல் 3 வரை கோத்த டாமான்சாராவில் உள்ள Strand Mall பேரங்காடியில் நடைபெறவிருக்கிறது.
தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழுள்ள தெக்குன் மலேசியா ஏற்பாட்டில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை மையத்தின் ஒத்துழைப்பில் இந்த கார்னிவல் நடைபெறுகிறது.
மாநில மக்கள் குறிப்பாக சுங்கை பூலோ வாசிகள், தெக்குன் கடனுதவி திட்டம் குறித்தும், அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பிற மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள, இந்த 3 நாள் கார்னிவல் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
மூன்று நாள் அவ்விழா நெடுகிலும் சுங்கை பூலோ மக்களின் வசதிக்காக அங்கு 100க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் கண்காட்சிக் கூடங்கள் திறக்கப்படும்.
மக்கள் வந்து பயனுற ஏராளமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ரமணன் சொன்னார்.
வருகையாளர்களுக்கு அதிர்ஷ குலுக்கு வாயிலாக 2 மோட்டார் சைக்கிகளும், இன்னும் ஏராளமான பரிசுகளும் காத்திருப்பதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.