![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-09-17-AM-4089.jpg)
பெட்டாலிங் ஜெயா, மே 29 – வீட்டிலிருந்து தாம் சமைத்து விற்பனை செய்யும் உணவின் தரம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த வாடிக்கையாளர் ஒருவரின் கருத்துக்கு, வியாபாரி ஒருவர் “கடுமையான” முறையில் பதில் அளித்திருக்கும் “ஸ்கிரீன் ஷாட்” ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த “ஸ்கிரீன் ஷாட்டை”, பெண் ஒருவர் புக்கிட் ஜெலுதோங் எனும் முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், குலைந்து காணப்பட்ட சோறு, சுவையில்லாமல் இருந்த கோழி, மிகவும் கொஞ்சமான உணவு ஆகியவை குறித்து, வாடிக்கையாளர் ஒருவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், அந்த கருத்தை ஏற்க மனமில்லாமல், சம்பந்தப்பட்ட வியாபாரி கடுமையாக பதிலளித்துள்ளதை காண முடிகிறது.
“உணவு சுவையாக இல்லை என்றால், அதனை சரி செய்ய முயல வேண்டும். அதனை விடுத்து வாடிக்கையாளர்களிடம் சினம் கொள்வது ஏற்புடையது அல்ல” என அந்த பதிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வியாபாரியிடம் உணவை வாங்கிய இதர சில வாடிக்கையாளர்களும் அந்த பதிவின் கீழ் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
“நானும் இதுபோல கருத்து தெரிவித்துள்ளேன். எனினும், அவர் தற்காத்து தான் பேசினார்” என அதில் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“உடல் நலம் சரியில்லாததால், ஒருமுறை தான் நான் அவரிடம் உணவு வாங்கினேன். மிகவும் கொஞ்சமாக இருந்தது. அது தான் இறுதி முறை நான் அவரிடன் உணவு வாங்கியது” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.