Latestஉலகம்

ஜகார்த்தாவில், மின்னல் தாக்கி காற்பந்து வீரர் பலி

ஜகார்த்தா, பிப்ரவரி 13 – இந்தோனேசியா, மேற்கு ஜாவா, பண்டுங்கிலுள்ள, சிலிவாங்கி மைதானத்தில், காற்பந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கி காற்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

35 வயது செப்டியன் ரஹாஜ் எனும் அந்த வீரர் மின்னல் தாக்கியதால் மைதானத்தில் சரிந்து விழுந்ததை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், மருத்துவமனையை சென்றடையும் முன்னரே அவர் இறந்து விட்டதை, பின்னர் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

FC பண்டுங் மற்றும் FBI சுபாங் எனும் இரு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான காற்பந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட ஆட்டக்காரரை மின்னல் தாக்கும் காணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது.

உடல் மற்றும் தொடையில் ஏற்பட்ட மோசமான தீப்புண் காயங்களால் அவர் உயிரிழந்த வேளை ; அச்சம்பவத்தில் இதர விளையாட்டாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!