Latestமலேசியா

ஜெம்போலில் உணவகத்திற்குள் கார் புகுந்தது; மூதாட்டி மரணம்

ஜெம்போல், நவ 24 – ஜெம்போலில் 78 வயதான முதியவர் தவறுதலாக தனது காரின் எண்ணெய் மிதியை அழுத்தியதால் கார் ஒரு உணவகத்திற்குள் புகுந்து மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 8.50 மணியளவில் தாமான் மெராந்தி எனும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் 75 வயது Tan Joo Lan எனும் மூதாட்டி இறந்ததாக ஜெம்போல் மாவட்ட போலிஸ் தலைவர் Hoo Chang Hook தெரிவித்தார்.

அந்த உணவகத்திற்கு முன் காரை நிறுத்த முற்பட்டபோது அந்த முதியவர் திடிரென தவறுதலாக எண்ணெய் மிதியை அழுத்தியதால், இவ்விபத்து நிகழ்ந்தது. அதில் 35 வயது பெண் ஒருவரும் உடலின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டு ஜெம்போல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் கூறினார்.

கார் ஓட்டுனர் மேல் விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!