![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-30-Nov-2023-12-06-PM-2681.jpg)
பத்து பஹாட், நவம்பர் 30 – ஜொகூர், பத்து பஹாட், ஜாலான் கம்போங் ராஹ்மாட் – ஸ்ரீ காடிங் சாலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் ஒருவரின் சடலம், 12 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.
அவ்விபத்து நேற்று முன்தினம் இரவு மணி பத்து வாக்கில் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனினும், நேற்று காலை மணி பத்து வாக்கில், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள செம்பனை தோட்டத்தின் பாதுகாவலர் ஒருவர், விபத்துக்குள்ளான காரை கண்டு போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அவ்விபத்தில் 39 வயது லீ வீ செங் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாலான் குளுவாங்கிலிருந்து, ஜாலான் தஞ்சோங் லாபோ நோக்கி பயணமான லீயின் தோயோதா கொரோலா ரக கார், கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அக்காரிலிருந்து இருகிய நிலையில் லீயின் சடலம் மீட்கப்பட்டதை, பத்து பஹாட் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருலநுவார் முஸ்ஹட்டாட் அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
தலை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக லீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.