![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-08-Dec-2023-12-07-PM-9324.jpg)
ஜொகூர் பரு, டிச 8 – கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து நேற்று மீண்டும் ஜொகூர் பாரு நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
நேற்று மதியம் 1.30 மணியளவில் தொடங்கிய அடை மழை மாலை 5 மணி வரை பெய்தது. வழக்கத்திகு அதிகமாக 60 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததோடு ஜோகூர் நீரிணையில் கடல் நீர் பெருக்கு ஏற்பட்டதால் ஜோகூர் பாரு முழுவதிலும் 38 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக வடிகால் நீர்ப்பாசனத்துறையின் அறிக்கையிம் மூலம் தெரியவந்துள்ளதாக மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றத்திற்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்ஜஃப்னி ஷுகோர் தெரிவித்தார்.
வடிகால் நீர்ப்பாசனத்துறை தன்னிடம் இருந்த நீர் வெளியேற்றும் இயந்திர குழாய்களை பயன்படுத்தி கால்வாய் நீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும் நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் அதன் முயற்சி தோல்வியில் முடிந்ததாக அவர் கூறினார்.
திடீர் வெள்ளத்தை தடுக்கும் நடவடிக்கைக்கான சிறப்பு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜஃப்னி ஷுகோர் இத்தகவலை வெளியிட்டார். ஜொகூர் பாரு மாநகரில் ஏற்படும் திடீர் வெள்ளத்தை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மற்றும் தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.