Latestஉலகம்

டெனாலி மலையில் சிக்கிக் கொண்ட இரு மலேசியர்களில் ஒருவர் மரணம்; மற்றொருவர் பாதுகாப்பாக மீட்பு

அலாஸ்கா, ஜூன்-1 – அமெரிக்கா, அலாஸ்காவில் உள்ள டெனாலி மலை உச்சிக்கு அருகே மே 28 முதல் சிக்கிக் கொண்ட இரு மலேசிய மலையேறிகளில், ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்னொருவரை மீட்புக் குழு காப்பாற்றி நேற்றிரவு ஹெலிகாப்டர் மூலம் வெளியே கொண்டு வந்தது.

5,990 மீட்டர் உயரத்தில் மோசமான வானிலையில் சிக்கி இரு தினங்களாக தாங்கள் தங்கியிருந்த பனிக் குகையொன்றில் தனது சகா உயிரிழந்ததை, காப்பாற்றப்பட்ட மலையேறி உறுதிப்படுத்தினார்.

அவரின் உடலை வெளியே கொண்டு வருவதில், மீட்புக் குழு மோசமான வானிலையோடும் பலத்த காற்றோடும் போராடி வருகிறது.

குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகே மரணமடைந்தவரின் அடையாளம் குறித்து அறிவிக்கப்படும் என டெனாலி தேசிய பூங்கா தனது அறிக்கையில் கூறியது.

அவ்விருவருடன் மலையேறிய மற்றொரு மலேசியர் ஏற்கனவே ஒருவழியாகக் கீழே இறங்கி வந்து helicopter-ரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!