![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-11-May-2024-01-56-PM-3772.jpg)
சென்னை , மே11 – தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கு ஒரு அடையாளமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவரது படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களையும் தாண்டி பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து இதுவரை வெளிவராத தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் வறுமையில் இருந்தபோது ஆபிஸ்பாய் உட்பட பல்வேறு வேலைகளை பார்த்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால் அச்சமயத்தில் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர் சென்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்கொலைக்கு முயற்சித்தபோது அப்போது சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாகவும் அதன் பின்னர்தான் ரஜினிகாந்த் அன்றைய இரவு தூங்க சென்றிருக்கிறாராம்.
அப்போது கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் ஆற்றின் மீது தன்னை நோக்கி நடந்து வந்ததுபோலவும் பின்னர் அந்த நபரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியது போலவும் கனவில் காட்சிகள் வந்திருக்கின்றன.
மறுநாள் அனைவரிடமும் இது குறித்து ரஜினி கூற சுவரில் வரையப்பட்டிருந்தது சுவாமி ராகவேந்திராவின் ஓவியம் என்பது தெரியவந்துள்ளது ரஜினிகாந்துக்கு. அதன் பின்னர் ராகவேந்திரா கோயிலுக்கு சென்று ரஜினி வேண்டிய பிறகே தன் வாழ்க்கையிலி ஏறுமுகத்தை கண்டு தற்போது உலகம் போற்றும் மாபெரும் நடிகராகவும் மாறியதாக கூறப்படுகிறது .
பல வெற்றிப் படங்களை கொடுத்த பின்னர் ஆகக்கடைசியாக லால் ஆலாம் படத்தை கொடுத்த ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் மும்மூரமாக நடைபெற்று வருகிறது.