Latestஇந்தியா

தவறான ஊசியால் 22 மாத குழந்தை மரணம் ? குடும்பத்தினர் அதிர்ச்சி

புதுடில்லி, மார்ச் 10 – இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் தங்கள் குழந்தைக்குத் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் 22 மாத குழந்தை இறந்ததாக அக்குழந்தையின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

‘Hernia’ எனப்படும் குடலிறக்க நோய் அறுவை சிகிக்சைக்காக பாரதபுரிலுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையான Kanha’ அனுமதிக்கப்பட்டபோது இந்த அவலம் நடந்ததாக அக்குழந்தையின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மார்ச் 5ஆம் தேதி அறுவைச் சிசிக்சைக்கு முன்னதாக அந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அக்குழந்தை மூளை செயல் இழந்ததாக கூறப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று ஜெய்ப்பூர் மருத்துவனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது குழந்தை ‘Kanha’ இறந்ததாகவும், அக்குழந்தையின் தந்தை ஹரி சிங் புகார் செய்தார். இச்சம்பவம் தொடர்பில் தனியார் மருத்துவமனயின் மருத்துவர் கோவிந்த் குப்தா \வுக்கு எதிராக போலீசார் குற்ற விசாரணையை பதிவு செய்துள்ளனர். மார்ச் 5ஆம்தேதி அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தையின் கையில் மற்றும் முதுகெலும்பில் ‘Aneesthesia’ ஊசி போடப்பட்டது.

அதன் பிறகு அந்த குழந்தை மூளை செயல் இழந்ததால் உடனடியாக அக்குழந்தையை ஜெய்பூரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி அக்குழந்தையின் பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அக்குழந்தையின் மூளை செயல் இழந்துவிட்டதால் அக்குழந்தை உயிர்பிழைக்கும் சாத்தியம் இல்லையென மருத்துவர்கள் கூறியதாக ஹரி சிங் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!