![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/ferry-700x470.jpg)
சூராட் தானி, ஏப்ரல் 4 – தாய்லாந்து, சூராட் தானியிலிருந்து (Surat Thani), கோ தாவோ உல்லாச தீவிற்கு (Koh Tao) பயணமான, பெர்ரி பயணப் படகில் தீ ஏற்பட்டது.
சம்பவத்தின் போது, அந்த பெர்ரியில், உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள் என மொத்தம் 97 பயணிகளும், 11 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
பெர்ரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ, அதிவேகமாக இதர பகுதிகளை சூழந்தது.
எனினும், மீட்புப் படையினர் மற்றும் தனியார் கப்பல்களின் உதவியோடு, அந்த பெர்ரியில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
நேற்றிரவு மணி 11 வாக்கில், சூராட் தானியிலிருந்து புறப்பட்ட அந்த பெர்ரி, இன்று கோ தாவோ கடற்கரையை சென்றடைய இன்னும் 4.82 கிலோமீட்டர் தூரம் மட்டுமே எஞ்சியிருந்த சமயத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தீக்கிரையாகி மூழ்கிய பெர்ரியில், மோட்டார் சைக்கிள்கள், கார்களுடன், பொருட்களும் ஏற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.