Latestஉலகம்

திருமணத்தன்று மனைவி கர்ப்பம் எனும் தகவல்; சீனாவில் ஆத்திரத்தில் மனைவியை எட்டி உதைத்த மணமகன்

பெய்ஜிங், நவ 24 – சீனா, பெய்ஜிங்கில் திருமணத்தன்று தன் எதிர்கால மனைவி கர்ப்பமாக இருக்கிறார் எனும் தகவலை அறிந்த மணமகன் ஆத்திரத்தில் அப்பெண்ணை எட்டி உதைத்ததோடு திருமணத்தையும் நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் பெற்று வருகிறது.

அவ்வாடவன் அப்பெண்ணை எட்டி உதைத்ததில், மணமகள் மணமேடையிலிருந்து கீழே விழந்த சம்பவம் வலைத்தளவாசிகளை கடும் சினத்தில் தள்ளியுள்ளது.
‘உன் வருங்கால மனைவி கர்ப்பமாக இருக்கிறார்’ என அப்பெண்ணின் முன்னாள் காதலனிடமிருந்து மணமகனுக்கு குறுந்தகவல் வந்ததைத் தொடர்ந்து ஆத்திரத்தில் மணகன் இவ்வாறு செய்துள்ளான் என கூறப்பட்டுள்ளது.

அனைவரின் முன்னிலையிலும், அந்த பெண்ணை சாடியதோடு மட்டுமில்லாமல், அந்த குழந்தைக்கு யார் தந்தை என்றும் மணமகன் கேட்டுள்ளான்.
அப்பெண், இது நமது குழந்தைதான் என இறுதிவரை பிடிவாதமாக சொல்லியும் அம்மணமகன் நம்பாத நிலையில், அப்பெண் மீது தவறோ தவரில்லையோ ஒரு பெண்ணை எட்டி உதைப்பது மிகவும் தவறு, அதுவும் அனைவரின் முன்னிலையில் இப்படி செய்வது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என வலைத்தளவாசிகள் மணமகனை சாடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!