![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-06-Mar-2024-01-39-PM-4081.jpg)
புது டெல்லி, மார்ச் 6 – இந்தியா, பெங்களூருவில், திருமண நாள் பரிசு வழங்காத 37 வயது ஆடவர் ஒருவர், மனைவியால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
35 வயது ரியா கோஷ் எனும் பெண், திருமண நாள் பரிசு கிடைக்காததால் சினமடைந்தார்.
அதனால், பிப்ரவரி 27-ஆம் தேதி, உறங்கிக் கொண்டிருந்த 37 வயது பிரதீம் பத்ரா எனும் கணவரை சமையல் அறை கத்தியை கொண்டு சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
எனினும், அந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட அவ்வாடவர், அண்டை வீட்டுக்காரர்களின் உதவியால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவ்வாடவர் பின்னர் செய்த புகாரின் அடிப்படையில் அவரது மனைவி கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை ; விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.