![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-23-Apr-2024-07-32-PM-9120.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல் 23 – ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் மகிமா இணைந்து திருவிளங்கு சைவத் திருமுறை மாநாட்டை வருகின்ற ஏப்ரல் 27 மற்றும் 28 என இருநாள்களுக்கு ஏற்பாட்டுச் செய்துள்ளது.
இதில் ஏப்ரல் 27, சனிக்கிழமை அன்று DSK குழுமத்தின் ஒருங்கிணைப்பில், தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தலைமையில் தேவாரப் போட்டி நடைபெறவிருக்கிறது.
7 முதல் 15 வயது மற்றும் 16 வயதுக்கு மேல் என இருப் பிரிவுகளில் நடைபெறவுள்ள இப்போட்டியின் பதிவு நாள் நாளை 24ஆம் திகதி நிறைவடையவுள்ளது என தேவஸ்தானத்தின் தலைவரும் அரங்காவலருமான தான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
மாணவர்கள் தொடர்ந்து தேவாரப் பாடல்களைக் கற்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிகாட்டினார்.
இதனிடையே, இம்மாநாட்டில் இதயம் குளிர்விக்கும் இன்னிசைக் கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவுகள், சைவ சமயம் சார்ந்த சிறந்த பேருரைகள், தேவாரப் பண்ணிசைகள் ஆகியவையும் இடம்பெறவிருக்கின்றன என்றார் அவர்.
சைவச் சிந்தனையாளர்களும் பொது மக்களும் திரளாக வந்து இம்மாநாட்டிலும் தேவாரப் போட்டியிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.