![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-23-Nov-2023-10-46-AM-5134.jpg)
கோலாலம்பூர், நவ 23 – திரெங்கானுவில் வெள்ள நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து அங்கு நிவராண மையத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே வேளையில் கிளந்தானில் வெள்ள நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. திரெங்கானுவில் இன்னமும் 3,581பேர் இன்று காலைவரை நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். கோலா நெருஸ்சில் 15 நிவாரண மையத்தில் 430 குடும்பங்களைச் சேர்ந்து 1,598 பேர் தங்கியுள்ளனர். இதனிடையே கிளந்தானில் இன்று காலைவரை 96 குடும்பங்களைச் சேர்ந்த 376 பேர் நிவாரணை மையங்களில் தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது .